உலக வங்கி கடன் உதவியின் கீழ் அறுபது அம்புலன்ஸ்கள்!

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கையில் கொவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்தினால் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 60 புதிய அம்புலன்ஸ்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அண்மையில் சுகாதார அமைப்புகளுக்கு கையளிக்கப்பட்டன.

நாட்டின் சுகாதார அமைப்பின் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட இந்த அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் பெறுமதி 24.4 மில்லியன் ரூபாவாகும், அதன்படி நன்கொடையாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளின் மொத்த பெறுமதி 1464 மில்லியன் ரூபாவாகும்.

சுகாதார அமைச்சரினால் 11 மருத்துவமனைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் அலுவலகங்களுக்கு குறித்த அம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, ராகம புனர்வாழ்வு மற்றும் தலசீமியா பிரிவு, முல்லேரியா வைத்தியசாலை, ராகம போதனா வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, டி சொய்சா மகளிர் வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கொழும்பு, கேகாலை, கண்டி மற்றும் இரத்தினபுரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்களுக்கு இந்த அம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்தா, சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், பிரதி பணிப்பாளர் நாயகம் (விநியோகம்) சிசிரகுமார, பணிப்பாளர் (போக்குவரத்து) ஏ.சி.எச்.எஸ். ஜிசாந்த, உலக வங்கியின் பொது சுகாதார சேவைகள் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் தீபிகா ஆர்ட்டிகல மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *