
சிரேஷ்ட்ட பிரஜைகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கு கிடைக்கவேண்டிய கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை இந்த கொடுப்பவின் பயனாளர்களாக உள்ள நிலையில் அதிகமானோர் சிரேஷ்ட பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு இதுவரை காலம் தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் வாயிலாக பெற்றுக்கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது சமுர்தி வங்கியின் வாயிலாக வழங்கப்படுகின்றது.
குறித்த கொடுப்பனவிற்கான பயனாளர்கள் சமுர்தி வங்கியில் கணக்கொன்றை பேண வேண்டும் என்பதோடு, நூற்றுக்கு 30 வீதமானவர்கள் சமுர்த்தி வங்கியில் கணக்கினை ஆரம்பிக்காமையே கொடுப்பனவுகள் கிடைக்காமைக்கு காரணம் என சமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நுண்கடன் நிதிப்பிரிவின் பணிப்பாளர் சுனில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நூற்றுக்கு 70 வீதமானவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்