களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாக பு।திய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்’ தலைப்பில் நடைபெற்ற ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இந்த ஆய்வு மாநாட்டில் உரையாற்றுவதற்காகவே மைத்திரி விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
அவரை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சற்குணராஜா வரவேற்று கைலாகு வழங்கினார்.