
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதன் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான குழு என இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் குழு ஒன்றும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.