ரணிலின் மனைவி யாழ்ப்பாணத்தில் கூறியது என்ன ?

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவான தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்வரும் 03 வருடகாலப்பகுதி தேவையாக இருக்கின்றது என மைத்திரீ விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்டநடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது.

தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில் தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாரிய பின்னடைவு சகல துறைகளிலும் காணபட்டுள்ளன. அவ்வாறான நிலையினை திறம்பட மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அதற்கு எதிர்வரும் 03 வருடகாலப்பகுதி தேவையாக இருக்கின்றது .

பொருளாதார ரீதியாக பண்புபற்ற வதிவிடங்களை உருவாக்க மனிதாபிமான உதவிகள் மேம்படுத்தப்படும். கடந்தகாலத்தை பின்பற்றாது எதிர்காலத்தில் வலுமையுள்ள சமூக கட்டமைப்பினை உருவாக்க சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது – என்றார்.

மேலும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல் தொடர்பான 24 ஆய்வுகட்டுரையும்,12 உபதலைப்புகளுடான ஆய்வுக் கட்டுரைகள் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதில் கொழும்பு, களனி, யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விப் புலமையாளர்கள், மாணவ மாணவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *