யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி திணைக்களம் ஊடக வழங்கப்படும் கொடுப்பனவுகளை,நேரடியாக பயனாளிகளிடம் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ,சமுர்த்தி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
கொடுப்பனவுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொழுது ஏற்படும் பிரச்சினைகளுக்கு ,தீர்வுகளை எங்களுடைய பணிப்பாளர் நாயகம் வழங்கியிருந்தார்.குறிப்பாக முதியோர்களுக்கான கொடுப்பனவுகள்,சிறுநீரக கொடுப்பனவுகள் என்பன தற்போது சமூர்த்தி கணக்கின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் ஏற்படக்கூடிய சில இடர்பாடுகளை களைவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய அறிவுறுத்தல்களும் இன்று வழங்கப்பட்டன.
எனவே எதிர்காலத்திலே சிறப்பான முறையில் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட இருக்கின்றன. கடந்த கொரோனா காலங்களில் எங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மிகச்சிறப்பாக கடமையாற்றி,மக்களுடைய வீடுகளை தேடிச் சென்று உணவுப்பொதிகளை கையளித்திருந்தார்கள்.அதேபோன்று முதியோருக்கான கொடுப்பனவுகளை நேரடியாக சென்று கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. என்றார்.
பிற செய்திகள்