ரி-20 உலகக்கிண்ணம்: இன்றைய போட்டிகள் மழையால் இரத்து!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய போட்டிகள், மழையால் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சுப்பர்-12 சுற்றின் இன்றைய குழு-01 25ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதவிருந்தன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டியானது மழையால் கைவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நடைபெறவிருந்த குழு-01 26ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் அவுஸ்ரேலிய அணியும் மோதவிருந்தன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டியானது மழையால் இரத்து செய்யப்பட்டது.

இன்றைய போட்டிகள் மழையால் இரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

குழு-01இல் இடம்பெற்றுள்ள நியூஸிலாந்து அணி 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அயர்லாந்து அணி 3 புள்ளிகளுடன் மூனறாவது இடத்திலும் அவுஸ்ரேலியா அணி 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இலங்கை அணி 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *