வடக்கு மாகாண ஆளுநரின் வழிநடத்தலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த (கட்டணம்) மருத்துவ சிகிச்சை பிரிவும், மருந்து விற்பனை நிலையமும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வு அச்சுவேலி – செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந்துலசேன கலந்து கொண்டார்.
இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
பிற செய்திகள்