கனடாவில் உயிரிழந்த யாழ் வாசிகள் – தாயார் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கனடா – மார்க்கம் நகரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது, குறித்த தாயாரின் இரு பிள்ளைகள் உயிரிழந்தனர்.

கனடாவில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தைப் பூர்விகமாக கொண்ட தமிழர்களான ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் சம்பவத்தில் காயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து,தாயாரின் உடல் நிலை மிகவும் பாதித்திருந்த நிலையில்,தற்போது அவரின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *