பெற்றோருக்கு இடையிலான சண்டையில் சிக்கி பரிதாபமாக இறந்த சிறுவன்

மாத்தறை கொஸ்மோதர, வரல்ல,உவரகல பிரதேசத்தில் நேற்றிரவு கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் அவர்களின் 9 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இரண்டு பேருக்கும் இடையிலான சண்டையின் போது சிறுவனின் தந்தை, தாயை கத்தியால் தாக்கிய போது, கத்தி எதிர்பாராத விதமாக சிறுவனின் தலையில் பட்டுள்ளது.

இதனால், படுகாயமடைந்த சிறுவன் மொரவக்க-கொஸ்னில்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *