கனியவள உற்பத்தி சட்ட மூலம் கடந்த 26 ஆம் திகதி முதல் அமுலில்!

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட கனியவள உற்பத்தி விசேட சட்ட மூலம் கடந்த 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவித்து அமைச்சர் கஞ்சன விஜயசேகரவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றில் குறித்த சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்ட சட்டத்திற்கு அமைவாக சர்வதேச வழங்குனர்களுக்கு இந்த நாட்டின் வலுசக்தி துறையினர் பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விமானங்களுக்குரிய எரிபொருளை இறக்குமதி செய்யும் தனியுரிமை நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய முதலீட்டாளர்களுக்கான சட்டத்தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *