
மாத்தறை, திஹாகொட பகுதியில் 15 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய பொலிஸ் உத்தொயோகஸ்தர் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகரை நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு, மாத்தறை நீதவான், இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய, தினம் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் அதனை நிறுத்தி சோதனையிட சென்ற போது, திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாகி இயங்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.
குறித்த, சம்பவத்தில், படுகாயமடைந்த பாடசாலை மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்