மூதூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் ,மூதூர் பொது சுகாதார பரிசோதகர் பகுதியில் உள்ள உணவகங்கள், பலசரக்கு நிலையங்கள் மற்றும் வெதுப்பகங்கள் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதர்களால் இன்று சனிக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டன.
இதன்போது கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதும் காலவதியானதுமான உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




பிற செய்திகள்