நிகழ்காலத்தை மாத்திரம் சிந்திக்காமல் மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் – அமைச்சர் ரொஷான்

நிகழ்காலத்தை குறித்து மாத்திரம் சிந்திக்காமல் எதிர்கால அபிவிருத்தியையும் கருத்திற் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன் அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு வழிகாட்டுவதும் முக்கியமானது எனவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது மிகவும் வரிய நிலையில் உள்ள மக்களுக்கே நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

எனினும், நாம் முன்னேற்றமடைய கூடிய வகையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *