சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எமது மக்களின் வலி, வேதனை ரணசிங்க பிரேமதாசவுக்கு புரிந்ததுபோல, சஜித்துக்கும் நல்ல தெளிவு உள்ளதோடு மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை முறைமையை மாற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றார் எனவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் கல்வி, சுகாதாரம், அரசியல் இருப்பு என்பன முறையாக இடம்பெற சஜித் இந்நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *