‘இயன்றவரை செய்வது முயற்சி அல்ல, முடியும் வரை செய்வதே முயற்சி’! தன் முயற்சியில் 18 வீடுகளை கையளித்த செல்லத்துரை கருத்து

‘இயன்றவரை செய்வது முயற்சி அல்ல, முடியும் வரை செய்வதே முயற்சி’. அந்த எண்ணம் என் மனதில் இருந்தது. என்னுடைய உழைப்பினால் கடவுளின் அருளால் இந்த 18 வீடுகளும் முடிக்கப்பட்டது என இராஜேஸ்வரி அறக்கட்டளையின் தலைவர் செல்லத்துரை திருமாறன் தெரிவித்தார்.

இராஜேஸ்வரி அன்புச்சோலை என்ற 18 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டத்தின் கையளிப்பு நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

எண்ணங்களில் மனப்பாங்கு சேவை இருந்தாலும் அதனை செயல்வடிவம் ஆக்குவது இயலுமான காரியமில்லை.

இந்த மிக உயர்ந்த சேவையுடன் கூடிய சிந்தனை எவ்வாறு வெற்றியளித்தது எமது ‘சமூகம் மீடியா’ இராஜேஸ்வரி அறக்கட்டளையின் தலைவர் செல்லத்துரை திருமாறன் அவர்களை வினவியது.

அதற்கு பதிலளித்த அவர்,

நாங்கள் பிறந்த இந்த பூமிக்கு ஏதோரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். அது நல்லவிதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் இருந்து இன்று வரை உள்ளது. அதன் வெளிப்பாடே இந்த 18 வீட்டுத்திட்டம்

கொரோனா நோய் உலகத்தில் எல்லா மக்களையும் பாதித்து கொண்டிருந்த காலத்திலே, பொருளாதாரம் நலிவுற்று இருக்கின்ற நேரத்திலே, இந்த வீடுகள் முடிக்கப்பட்டு இருக்கின்றது என்றால், உண்மையாகவே எல்லா கடவுளுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

நான் பணத்தை அடிக்கி வைத்து இந்தத் திட்டமானது முடிவு பெறவில்லை. எப்படியாவது இந்த வீட்டுத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ‘இயன்றவரை செய்வது முயற்சி அல்ல, முடியும் வரை செய்வதே முயற்சி’. அந்த எண்ணம் என் மனதில் இருந்தது. அதற்காக நான் என்னொருவரிடம் இருந்து களவெடுக்கவில்லை. என்னுடைய உழைப்பினால் கடவுளின் அருளால் இந்த 18 வீடுகளும் முடிக்கப்பட்டது.

‘எண்ணம் சரியாக இருக்கும் போது அந்த எண்ணம் வெற்றியில் பிரதிபலிக்கும்’. ஆகவே எல்லா மக்களும் உங்களுடைய எண்ணத்தை 100 சதவீதம் திருப்தியாக நினைத்தால் அந்த எண்ணம் வெற்றி பெறும் என்பதற்கு நான் ஒரு உதாரணமாக இருக்கின்றேன்.

எவ்வாறு இந்த வீடுகளுக்கான பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்று எமது ‘சமூகம் மீடியா’ அவரிடம் வினவிய போது,

ஒரு தந்தையிடம் இருந்து பெற முடியாத சொத்து கல்விதான். தந்தையின் பட்டம் பிள்ளைக்கு போக முடியாது அது இயற்கையின் வரலாறு. ஆகவே நாங்கள் கல்வி மூலமாகத் தான் ஒரு நாட்டினது மாற்றத்தை ஏற்படுத்தலாம். கல்வி என்பது மனிதனுக்கு ஒரு முதுகெலும்பு.

கல்வியின் அடிப்படையில் தான் பயனாளிகளை தெரிவு செய்து இருக்கின்றோம். பெண் தலைமைத்துவம், கல்வி கற்கின்ற பிள்ளைகள் இந்த வீட்டில் இருக்க வேண்டும். அவர்களுக்கு தான் நாங்கள் முன்னுரிமை கொடுத்துள்ளோம்.

பயனாளிகள் கூட ஒரு குழு ஒன்றை உருவாக்கி இருக்கின்றார்கள். முன்னாள் துணைவேந்தராக இருந்த பாலசுந்தரம் ஜயா, சண்முகலிங்கம் ஜயா அப்படியான கல்விசார்ந்தவர்கள் சேர்ந்து நானும் 7 பேரும் சேர்ந்து தான் இந்த குழுவை நியமித்தோம். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பயனாளிகளை நாம் தெரிவு செய்தோம்.

கல்வி இல்லை என்றால் இந்த உலகம் இருண்ட பூமியாகிவிடும். கடந்து சென்ற ஒரு மணி நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது என்பது வரலாறு.

கல்வி மூலம் எமது நாட்டில், உலகத்தில் ஒரு மாற்றத்தை எற்படுத்த முடியும் என்பது வரலாறு என்று கூறி, எத்தனை வழிகளில் என்னால் உதவி செய்ய முடியுமோ அதை செய்வேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *