மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் – பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்க்கிழமை) டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பெரியகல்லாறு கரையோரப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருகும் வகையிலிருந்த இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டதோடு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து கரையோரப்பகுதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை தற்போது மழையுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *