
கடந்த வாரம் யால பூங்காவில், வனவிலங்கு சட்டத்தை மீறி வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில், வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், அமைச்சர் மஹிந்த அமரவீரவின் சகோதரரின் மகனான துலித நுவான் அமரவீர (29) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று(29) திஸ்ஸமஹராம நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, தலா 500,000 ரூபா அடங்கலான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வனவிலங்கு பூங்கா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனம் செலுத்தியிராத போதிலும், யால பூங்கா நுழைவாயிலில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஊடாக அடையாளம் காணப்பட்டார்.
எவ்வாறாயினும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிற செய்திகள்