ஆனைக்கோட்டையில் கோழிகளுக்கு விஷம் – 35 கோழிகள் இறப்பு

ஆனைக்கோட்டை , முள்ளிப் பகுதியில் 3 குடும்பங்களின் 35 க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு விஷம் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ளன என உரிமையாளர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்கு அண்மையில் சென்று நபரொருவர் கோழிகளை குறைந்த விலைக்கு கேட்டுள்ளார். எனினும் அவருக்கு கோழிகள் விற்பனை செய்யப்படவில்லை.

இந்தநிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட குறித்த நபர் ‘‘கோழிகளை விஷம் வைத்து கொல்வேன்’ எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

குறித்த சந்தேகநபரது காணிகள் எமது வீடுகளுக்கு அருகிலேயே உள்ளது என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இழிசெயலால் எமது அன்றாட வாழ்வாதாரத் தொழிலான கோழி வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எமக்கு இழப்பீடும் நீதியும் கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கவலை வெளியிட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *