
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை எதிர்வரும் 9ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் படகொன்றில் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த புதன்கிழமை 7 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த வியாழக்கிழமை கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போதே 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.