
நாட்டில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்துநர் இன்றி இயங்கும் அதிநவீன புதிய பஸ் சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பொதுப்போக்குவரத்து சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
முதற்கட்டமாக கொழும்பு நகரிலுள்ள கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்தப் பேருந்து எவ்வளவு தூரம் பயணித்தாலும் 200 ரூபா மாத்திரமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
கையடக்க தொலைபேசியில் உள்ள செயலி மூலம் கட்டணம் செலுத்தப்படுவதால் இந்த சேவையின் போது நடத்துநர் தேவையில்லை விசேட அம்சமாக இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.