போதைப்பாவனை அதிகரிப்பு அரசே காரணம் – ஈ.பி.டி.பி உறுப்பினர்

வடக்கில் என்றுமில்லாத அளவு அதிகரித்தும்வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விநியோகத்துக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு. அரசாங்கம் நாடுக்குள் எடுத்துவரப்படும் போதைப்பொருளை கண்டறிந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள தீவிரம் காட்டியிருந்தால் இந்த நிலைமை உருவாகியிக்காது.

இவ்வாறு சபை அமர்வின்போது வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் நடராசா சுட்டிக்காட்டி அரசின் கபடத்தை நையாண்டி செய்து நடனம் ஆடியுள்ளார்.

அரசாங்கம் போதைப்பாவனையை ஒழிப்பதாக வேசமிட்டு தமிழ் இளைஞர்களை அதற்குள் கட்டுண்ட வைத்து சீரழிக்க முனைகிறது.

அரசாங்கத்தின் நாடகத்தை நாமென்றும் அறிவோம்.

நாடு முழுவதும் முதலில் மதுவை ஒழிக்க அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.

நாம் ஊர் ஊராச் சென்று போதைப்பொருள் பாவனையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்கள் நீங்கள் பொலிஸா? எனக் கேட்கின்றனர்.

எனவே போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் தண்டனையளிக்க வேண்டும். நாட்டு மக்களை கொடிய அரக்கனான போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *