இராஜேஸ்வரி அறக்கட்டளையின் உரிமையாளரால் 18 வீடுகள் கையளிப்பு!

யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியில் இராஜேஸ்வரி அன்புச்சோலை எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 18 வீடுகள் இன்றைய தினம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

இராஜேஸ்வரி அறக்கட்டளையின் உரிமையாளர் செல்லத்துரை திருமாறனின் நிதியுதவியில் 2021 ஆம் ஆண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட கல்வியில் ஆர்வமுள்ள வீடு காணியற்ற வீடு கட்ட இயலாதவர்கள் என தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 18 பேருக்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடானது கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *