கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளராக ரியர் அத்மிரல் பூஜித்த விதான நியமனம்!

இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ரியர் அத்மிரல் பூஜித்த விதான நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது, குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட ரியர் அத்மிரல் அநுர ஏக்கநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக, ரியர் அத்மிரல் பூஜித்த விதான நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 28ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக்கடிதத்தை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவினால் ரியர் அத்மிரல் பூஜித்த விதானவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்த பூஜித்த விதானகே, ரியர் அத்மிரலாக இந்த வருடத்தின் ஜூலை மாதம் தரம் உயர்த்தப்பட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *