வரலாற்று சிறப்புமிக்க , சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படுவதுமான திருகோணமலை – வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி தேவஷ்தானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்கார நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது முருகப் பெருமானும், சூரனும் வெளிவீதியாக வருகைதந்து , இறுதியாக மாமர வடிவு கொண்டு நிற்கின்ற சூரரை முருகப் பெருமான் தனது வேலினால் இரு கூறாக சங்காரம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

கந்தசஷ்டி நிகழ்வின் இறுதி நாளான இன்று சூரசம்கார நிகழ்வானது சூரனுக்கும், முருகனுக்குமான போரில் சூரனின் ஆணவத்தை அடக்கி உலகத்தின் தீய இருளை அடக்கி நல்லொளி கொடுக்கும் நிகழ்வாக இந்துக்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில் சூரனை சுமக்கின்றவர்கள் அசூரர்களாகவும், முருகப் பெருமானை சுமக்கின்றவர்கள் தேவர்களாக பாவனை செய்து இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
பிற செய்திகள்