
நாட்டில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் திடீர் அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கோதுமை மா உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பையடுத்து பேக்கறி சார்ந்த உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன.
அதேவேளை பாண் ஒரு ராத்தல் 200ரூபாவாக விலை அதிகரிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் அன்றாடம் உழைத்து வாழும் வறிய மக்கள் ஒரு ராத்தல் பானை வாங்குவதற்கும் பெரும் சிரமப்படும் நிலை காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை நாளை (31) குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இன்று (30) தெரிவித்தார்.
ஊடகங்களில் வெளியாகும் விலைக்கு பேக்கரிகளுக்கு கோதுமை மா கிடைப்பதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர் 320 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மா தற்போது 298 ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்