நெல் உற்பத்திக்கு தேவையான திண்ம உரத்தை பெற்றுத்தர யுஎஸ்எய்ட் இணக்கம்!

நெல் உற்பத்திக்கு தேவையான 36 ஆயிரம் மெற்றிக் டன் திண்ம உரத்தை எதிர்வரும் சிறு போகத்துக்கு பெற்று தருவதற்கு யுஎஸ்எய்ட் அமைப்பு இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முறை பெரும்போகத்துக்கான அடிப்படை உரமான ட்ரிப்பிள் சுப்பர் பொசுபேற்று என்ற உரத்தை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உரத்தை உற்பத்தி செய்யும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், யுத்தம் காரணமாக ஏற்றுமதியை நிறுத்தியுள்ளன.

எனினும், அடுத்த சிறுபோகத்துக்கு குறித்த உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரும் போகத்துக்கு அவசியமான உரத்தை வழங்குதல் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *