இந்தியாவின் குஜராத்தின் மோர்பியில் தொங்குபாலம் இடிந்து வீழ்ந்ததில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.