
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை காரியாலயம் நேற்று டிக்கோயாவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
என்றாலும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்நிகழ்வில் கந்துகொண்டிருந்தமைதான் மலையக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஜீவன் தொண்டமான் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் தொழிலாளார் தேசிய சங்கத்தில் இரண்டு நிலைப்பாடுகள் உருவாகியுள்ளது.
ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவை தெரிவித்துள்ள போதிலும் இறுதி தருணத்திலேயே ஜீவனின் வருகை தருவது பலருக்கு கடைசி நேரத்திலேயே தெரிந்துள்ளது.
குறிப்பாக ஜீவன் தொண்டமான் தலைமையகத்துக்குள் வருகைதரும் போது தொழிலாளார் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் முக்கியர்ஸ்தர்கள் சிலர் தலைமையகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கட்சியின் தலைமையிடம் இது தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்வில் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு உள்ளது .
பிற செய்திகள்