
இந்து மக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றாக விளங்கும் கந்தசஸ்டி விரதத்தின் ஒரு அங்கமாக நேற்றையதினம் ஆலயங்களில் சூரன் போர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் வட்டு. சங்கரத்தைப் பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயமொன்றில் நேற்றுமாலை இடம்பெற்ற சூரன் போர் நிகழ்வில் இரண்டு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் வாள்வெட்டாக மாறியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.
வாள்வெட்டுச் சம்பவத்தில் இலக்கான இரு இளைஞர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்