பேருவளை கடற்றொழிலாளர்களை சந்தித்தார் அமைச்சர் டக்ளஸ்

பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில்சார் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில், நேற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.

தென்னிலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழிலாளர் கிராமங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தின் தொடர்ச்சியாக பேருவளை கடற்றொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேலியகொட மத்திய மீன் சந்தை செயற்பாடுகள் தொடர்பாக தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, விடுமுறை தினமான இன்று, சந்தை வளாகத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியதுடன், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *