யாழில் மண்டை கழுவும் வேலைத்திட்டம் ஆரம்பம்

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,பல வருடங்களாக தமது உறவுகளைத் தேடி போராட்டம் நடாத்தி வருகின்றனர்.பிள்ளைகளை காணாமலே பல பெற்றோர் உயிரிழந்துள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்,இழப்பீட்டுத் தொகை வேண்டாம்.சர்வதேச விசாரணை வேண்டும் என வெயில் மழை பாராது கண்ணீருக்கு மத்தியில் பல போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு வருகை தருவதை அறிந்த உறவுகள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொறுமையை இழந்த அவர்கள் ,மாவட்டச் செயலக கேட்ப்போர் கூடத்துக்குள்ளும் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இழப்பீட்டுக்கான அலுலவகம் பிரிவினர்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சிலரையும்,அரசியல் பிரமுகர்கள் சிலரையும் அழைத்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கலந்துரையாடி வருகின்றனர்.இதனை அவதானித்த சமூக ஆர்வலர்கள் “மண்டை கழுவ வேண்டாம் ” என குறிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *