யாழில் பின் கதவால் தப்பி ஓடிய நீதி அமைச்சர்

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் எற்பாட்டில், கடந்த யுத்த காலத்தில் இருந்து யாழ். மாவட்டத்தில் இழப்பீடுகள், காயமடைந்தவர்களுக்கான ஆவணங்கள் பெறுவதில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாகவும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மீளவும் வருகை தந்துள்ள மக்கள் தமது ஆவணங்களை இலகுபடுத்தும் முறையிலான நடமாடும் சேவை இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை ஆரம்பமானது.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த நடமாடும் சேவை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.இந்த நிலையில் நீதி இல்லாத நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் எதற்கு வரவவேண்டும்,எமக்கு இழப்பீடு வேண்டாம் என தெரிவித்து யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் ,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த அமைச்சர் சுமார்9.30 மணிக்கு நடமாடும் சேவையை ஆரம்பித்துவிட்டு,மாவட்டச் செயலகத்தை விட்டு வெளியேறினார்.இதனை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,மாவட்டச் செயலக கேட்ப்போர் கூட்டத்துக்குள் நுழைந்த போராட்டம் மேற்கொண்டனர். அதன் பின்னர்.போராட்டக் காரர்கள் வெளியேற்றப்பட்டு.கேட்போர் கூடத்தில் அமைச்சரின் பங்குபற்றுதலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகிறது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *