
நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டைப் பண்ணைகளால் மீனவ சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம் றியாஸ் அகமட் எழுதிய கடலட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின் அரசியலும் சூழலியலும் என்ற நுால் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாற தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பூமியின் பல்வகைமை தன்மையை மாற்றியமைக்கும் செயற்கைத் திட்டங்களை சூழலியலாளன் என்ற வகையில் முற்றாக நிராகரிக்கின்றேன். செயற்கை பண்ணைகள் வடக்கில் ஆக்கிரமிப்பதன் மூலம் எதிர்கால மீனவ சமூகம் தங்களது பாரம்பரிய மீனவ பண்பாட்டை இழந்து நிர்க்கதிக்குள்ளாகும் நிலை நிச்சயம் தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
இன்று வடக்கை ஆக்கிரமித்து மீனவ சமூகத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குட்படுத்தும் செயற்கை கடலட்டை பண்ணைகள், இறால் பண்ணைகள் எதிர்கால சந்ததியின் ஆரோக்கியமான வாழ்வுக்கு குந்தகமாக அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவற்றை தடுப்பதற்கு தமிழர்கள் நாம் எம்மை நாமே ஆளுகின்ற நிலை உருவாக வேண்டும். பூகோள அரசியல் குறித்து இச் செயற்பாட்டினை நோக்குவோமெனில் சீனாவின் ஆதிக்கம் யாழ். குடாக்கடலில் உருவாகி வருகின்றமை இந்திய சீன போட்டியென்பதற்கு அப்பால் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குட்படுத்துகின்றது.
இந்நிலையில் இந்தியா தமிழர் நலன் குறித்து சிந்திக்காதவரை இன்றைய அவலநிலை தொடர்வதை எவ ராலும் தவிர்க்க முடியாது.
இதேவேளை உயிர்பல்வ கைமை வாய்ந்த வடக்கு கட லில் செயற்கை பண்ணைகளை சட்டரீதியாகவோ சட்டவிரோத மாகவோ அமைக்கின்ற போது அவை குறுகிய காலத்திற்கு சிலருக்கு இலாபம் தருவதாக அமைந்தாலும் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்றபோது மீனவ சமூகத்துக்குள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
பிற செய்திகள்