கோவை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக – திருமாவளவன் விமர்சனம்

கோவையில் கடந்தவாரம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஆதாயம் தேடும் நோக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பா.ஜ.க.வினரும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே கோவை வெடிப்பு சம்பந்தமாக அவதூறு பரப்பி வரும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

இதேவேளை குஜராத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்த குடும்பத்திற்கு இந்திய அரசும் குஜராத் மாநில அரசும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *