கண்டியில் 3 பாடசாலை மாணவர்கள் கஞ்சாவுடன் கைது

கண்டியில் உள்ள மூன்று முன்னணி பாடசாலைகளின் மூன்று மாணவர்கள் கஞ்சாவுடன் பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூங்காவில் கஞ்சாவை புகைக்க தயாரான போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் பகுதி நேர தனியார் வகுப்புகளில் கலந்துக்கொள்வதற்காக சென்று, கண்டி ஜோர்ஜ் ஈ. டி. சில்வா பூங்காவில் கஞ்சாவை புகைக்க தயாராகி கொண்டிருந்த போது பொலிஸ் அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மாணவர்களிடம் இருந்து 3 ஆயிரம் மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகளில் உயர் தரம் படிக்கும் மாணவர்கள் அவர்கள் கற்கும் பாடசாலைகளில் கீழ் வகுப்பு மாணவர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *