இலங்கையின் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்- மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கையின் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் பதில் மத்திய வங்கி ஆளுநர் Grant Spencer மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (31) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற நிதிக்குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் கூட்டுறவு குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு நாடாளுமன்ற நிதிக் குழுவின் பணிகள் குறித்தும், நாடாளுமன்றத்தின் கோப் குழுவின் பணிகள் குறித்தும் இச் சந்தர்ப்பத்தில் விவாதிக்கப்பட்டதுடன், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மோசடி-ஊழல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மோசடி-ஊழல் இல்லாதொழித்தல் மற்றும் வரிக் கொள்கைகள், தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கக் கூடிய பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பிலும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *