தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட குச்சவெளி வடலிக்குளம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட பொது நூலகம் இன்று( 31) குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது குச்சவெளி பிரதேச சபையின் சபையின் செயலாளர் திருமதி மாலினி அசோக்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.எம்.சாஜித் மற்றும் பிரதேச சபையின் உறுபினர்களான ஏ.ஜீ.பழில்அமீன் மற்றும் திரு.ஜே.நிமலகாசன் அத்துடன் ஏ.பர்சானா அத்துடன் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் தலைவர், பிரதேச மக்கள், முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியைகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அப்பகுதி முன்பள்ளி மாணவ செல்வங்களினால் அதிதிகள் மாலையிட்டு வரவேற்க்கப்பட்டதுடன் இத் திறப்பு விழாவில் முன்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களிற்கான ஊக்குவிப்பு தொகையும் கௌரவ தவிசாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் இங்குள்ள மாணவர்கள் சிறப்பான முறையில் தங்களின் முன்பள்ளி கல்வியை தொடர்ச்சியாக பேனி அறிவார்ந்த சமூகமாக மாறவேண்டும் அத்துடன் எமது சிறார்களை சிறந்த தலைவர்களாக மாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு பெற்றார்களிடமுள்ளது என்றும் இந்த நூலகம் எமது சபையினால் திறக்கப்பட்டாலும் அது உங்களின் சொத்து இந்த பகுதியிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட வாசகர்களுக்கு கிடைத்திருக்கும் அருமையான சொத்து இதனை பாதுகாத்து சிறப்பான பயனை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.



பிற செய்திகள்