வனிதாபிமானா” கிழக்கு மாகாணத்துக்கான விருதைப் பெற்றார் ஜெனிதா பிரதீபன்

“வனிதாபிமானா” கிழக்கு மாகாணத்துக்கான விருதைப் பெற்றார் ஜெனிதா பிரதீபன்

சிரச tv மற்றும் NDB வங்கி இணைந்து வருடாந்தம் வழங்கி வரும் “சிறிலங்கா வனிதாபிமானா” விருதினை கிழக்கு மாகாணம் சார்பாக திருமதி ஜெனிதா பிரதீபன் பெற்றுள்ளார்.

சமூக சேவைக்காக இந்த விருதை பெற்றுள்ள ஜெனித்தா காரைதீவு பிரதேச செயலகத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமைபுரிகின்றார்.

பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர் பெண்கள் சிறுவர்களுக்கான உரிமைகள் தொடர்பாகவும் குரல் கொடுத்து வருபவர் ஆவார்.

இலக்கியத் துறையிலும் பல்வேறு பதிவுகளை தடம் பதித்து வரும் ஜெனிதா கல்முனை நெற் ஊடக வலையப்பின் பரிமாணம் பத்திரிகையின் மங்கையர் பிரிவின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.

கொழும்பில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் சமூக சேவைக்காக இலங்கையின் 9 மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒன்பது நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நற்பிட்டிமுனையை சொந்த இடமாகக் கொண்ட இவர் மோகன் பிறேமானந்தினி தம்பதிகளின் புதல்வி ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *