அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர் தனது காதலியின் அழைப்பை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு சென்று,ஜன்னல் ஊடாக காதலியின் அறைக்குள் நுழைந்து தங்கியிருந்துள்ளார் .
ஜன்னலின் ஊடாக நுழைந்து காதலியின் அறையில் இரவைக் கழித்த பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காதலியின் தந்தையால் பிடிக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அவரை பிணையில் விடுவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக தனது படுக்கையறைக்குள் செல்ல காதலனை காதலி அனுமதித்ததாக விசாரணைகள் மூலம் பொலிசார் கூறுகின்றனர்.
அனுமதியின்றி தனது வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு காதலியின் தந்தை பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
பிற செய்திகள்