அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவயில் அமைதியின்மை – பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் வாரியப்பொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பாக பௌத்த பிக்கு உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *