யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!

<!–

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா! – Athavan News

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுடைய பிறந்த நாள் நேற்று (திங்கட்கிழமை) யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் பட்டேலின் கண்காட்சியை யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவலிங்கராசா திறந்து வைத்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து, ஒற்றுமை மனித சங்கலியும் அதனை தொடர்ந்து ஒற்றுமை ஓட்டம் கலாச்சார மையத்திலிருந்து யாழ் இந்திய துணைத் தூதரகம் வரை இடம்பெற்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *