
இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள தேயிலை கைத்தொழிலை மீளப்பெற முறையான திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இது மிகவும் முக்கியமானது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கையில் இருந்த தேயிலை கைத்தொழில் துறையின் செழுமையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலை குறைந்துள்ள போதிலும், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த திரு.ரணில் விக்கிரமசிங்க,
தேயிலை தொழில் தொடர்பான உங்கள் தலைவரின் அறிக்கையை இன்று கேட்டேன். அவர் ஒரு சோகமான கதையை முன்வைத்தார். நம் நாடு இப்போது எதிர்கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தாலே அது புரியும். இப்போது எனது சோகமான கதையை முன்வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்று எரிபொருட்களின் விலை குறைந்துள்ள போதிலும், உக்ரைன் யுத்தம் காரணமாக குளிர் காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கும் என அனைவரும் நம்புகின்றனர். இதற்குப் பிறகு நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால் இதுதான் என்றார்.
ற செய்திகள்