புதுச்சேரி விடுதலை நாள் – தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி விடுதலை நாளை ஒட்டி, கடற்கரையில் நடைபெற்ற விழாவில், சாரல் மழைக்கிடையே தேசியக் கொடியை முதலமைச்சர் ரங்கசாமி, ஏற்றிவைத்தார்.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, கடந்த 1954ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பரப்போடு இணைந்த நாள், ஆண்டு தோறும் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி கடற்கரையில் காவல்துறையினர் பல்வேறு படைப்பிரிவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *