
யக்கலமுல்ல – குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 4 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 19ஆம் திகதி யக்கலமுல்ல குருந்துவாடி, களுவாகலை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது. இதில் நான்கு வயது குழந்தையும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் எனவும் சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.