சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் வளர்ச்சிக்கு காரணம் இதுதான் – வஜிர

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரது ஆதரவும் அவசியம் என்பதனால் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்தார்.

சிறிகொத்தவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதந்திரத்தின் பின்னர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தமது நோக்கங்களுக்காக பல்வேறு செயற்பட்டமையினாலேயே நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் இந்த அடிப்படை உரிமைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் அந்த நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *