ஓட்டோவுக்கு 10 லீற்றர் எரிபொருள்: பதிவுகள் ஆரம்பம்

முச்சக்கர வண்டிகளுக்காக வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிப்பதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக நேற்று மேல்மாகாணத்தில் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்றிட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் ஏனைய மாகாணங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

www.wptaxi.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் ஊடாக மேல் மாகாண பயணிகள் முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யலாம்.

இதனை 11 படிமுறையின் கீழ் செயற்படுத்தப்பட வேண்டும். அதில் முச்சக்கர வண்டியின் ஒளிப்படங்களும் சேர்க்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *