ஒரு மாதத்தில் 700 மாடுகள் சாவு – கவலையில் பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நோயினால் 700க்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகள் இறப்பது குறித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த பண்ணையாளர்கள் , மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர்.

மட்டக்களப்பு சர்வமத பேரவை மற்றும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பு ஆகிய அமைப்புகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அண்மைக்காலமாக கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீர்திடீர் என இறப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறு கால்நடைகள் உயிரிழக்கும்போது அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 9 தினங்களுக்குள் 200மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் ஏற்கனவே இதற்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தால் மாடுகள் இறப்பதை தவிர்த்திருக்கமுடியும் எனவும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பிலான மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *