கடன் பெறும் எல்லையை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

2022 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன்பெறும் எல்லையை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக கடந்த மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *