
தேர்தல் காலங்களில் வாக்குகளைக் கேட்டு வருகின்ற அரசியல் விபச்சாரிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (01) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நல்லாட்சி காலத்தில் அரசியல் இலாபங்களுக்காக ஈஸ்டர் தாக்குதல், முஸ்லீம்களின் சொத்துக்கள், உயிர்களை அழித்து, அல் குர்ஆனை எரித்து,பள்ளிகளை உடைத்து, கருத்தடை கொத்து, கருத்தடை உள்ளாடை, பலோப்பியன் அறுவை சகிச்சை என இட்டுக்கட்டி , குர்ஆன் பாடசாலைகளை நிறுத்தி பல்வேறு கொடூரங்களை அநியாயமாக முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு திணித்தார்கள்.
இவ்வாறு அரங்கேற்றப் பட்ட இக் கொடூர சம்பவங்களை தேர்தலின் போது அசை போட்டு இனத்தை உசுப்பேத்தி வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற சில அரசியல் விபச்சாரிகள் முஸ்லீம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்றங்களில் கை வைத்த போதும், 20 நாள் பச்சிளம் குழந்தை உட்பட நூற்றுக் கணக்கான ஜனாஸாக்களை எரித்த போதும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் 20 க்கு வாக்களித்து அந்த அரக்கர் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தனர்.
அப்பாவி முஸ்லீம்கள் அழு குரலோடு கண்ணீர் சிந்த எத்தனை ஆர்ப்பாட்டங்களும், கபன் சீலை போராட்டங்களும் நடாத்தப் பட்ட போது எதிலுமே பங்கு பற்றாத அந்த துரோகிகள் அரக்கர்களின் நடு வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு நோன்பு திறக்கின்றார்கள்.
சிறிதளவேனும் நோவினை செய்யாது நல்லடக்கம் செய்யப் பட வேண்டிய ஜனாசாக்களை எரித்து சாம்பலை கையில் தந்தஅந்த கொடியவர்களுக்கே எமது வாக்குகளை விற்று இலாபம் பெற்ற இந்த விபச்சாரிகள் மீண்டும் எப்படி வாக்குக் கேட்டு வர முடியும்?
எனவே, எதிர் வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் அந்த அரக்கர்களுக்கு முட்டுக் கொடுத்த அரசியல் விபச்சாரிகளோ, அல்லது கைக்கூலிகளோ வாக்குக் கேட்டு வீடுகளுக்கு வந்தால் ஈர்க்குக் கட்டுகளால் பாடம் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
பிற செய்திகள்